Disclaimer: இந்தப் பதிவு படம் பார்க்கப் போகிறவர்களுக்கான அறிமுகம் மட்டுமே. எனவே, ஸ்பாய்லர்கள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள், இதையும் படித்துவிட்டு, ஸ்பாய்லர்களுடன் கூடிய ஒரு விரிவான அலசல் (Analysis) பதிவை இங்கே படிக்கலாம்.

கதைக்கரு
கதையின் நாயகன் விக்னேஷ் (சித்தார்த்) ஒரு சாதாரணன். He is
nobody. தியேட்டரில் டார்ச் அடிக்கும் தொழிலாளி. படிப்பு, பணம், வீரம், அழகு,
புகழ், புத்திசாலித்தனம் என எதுவுமே இல்லாத ஒருவன். அவனுக்கு இருப்பது ஒன்றே
ஒன்றுதான். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைக் குறைபாடு. இரவில் தூக்கமில்லாமல்
அவதிப்படுபவனுக்கு லூசியா எனப்படும் தூக்கம்+கனவு மாத்திரை கிடைக்கிறது.
அதைப் போட்டுக்கொண்டதும் நன்றாகத் தூக்கம் வரும். அதோடு கனவும் வரும்.
கனவு என்றால், நாம் காணும் சாதா கனவுகள் இல்லை. ஸ்பெஷல் கனவு. உண்மை போலவே
இருக்கும், நம்மால் சுயமாக இயங்கக்கூடிய, நாமே உருவாக்கக்கூடிய ஒரு கனவு.
அதுமட்டுமல்ல. இந்தக் கனவு தொடர்ச்சியானது. ஒவ்வொரு நாள் இரவிலும், இந்தக் கனவின்
தொடர்ச்சியைக் காணலாம். அதாவது, விழித்திருக்கும்போது ஒரு வாழ்க்கை, தூங்கும்போது
வேறொரு வாழ்க்கை என இரண்டு வாழ்க்கைகளை வாழலாம்!
கதையின் அறிமுகம்
வெறும்பயலான விக்னேஷ், ஒவ்வொரு இரவிலும் மருந்தைப் போட்டுக்கொண்டு
தான் ஒரு பெரிய நடிகனின் வாழ்க்கையை வாழ்வதாக கனவு காண்கிறான். படத்தில் கனவுக்
காட்சிகளும், நிஜக் காட்சிகளும் கலர் மற்றும் கருப்பு வெள்ளையில் அடுத்தடுத்து
காட்டப்படுகின்றன. கலர்க் காட்சிகளில் அழகற்ற வெகுளியான விக்னேஷ், ஒரு பீட்சாக்
கடையில் வேலை செய்யும் அழகிய பெண்ணைக்கண்டு காதலில் விழுகிறான். அவள் வீட்டிற்கு
பெண் பார்க்கச் செல்லும்போது அவள் அவனை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறாள்.
அதேநேரம் கருப்பு வெள்ளையில் ஆணழகனான விக்னேஷும் நடிகையான அதே பெண்ணும்
காதலிக்கிறார்கள். கலரில், இவன் வேலை செய்யும் தியேட்டர் முதலாளி வாங்கிய கடனுக்குப்
பதிலாக தியேட்டரை விற்குமாறு ஒரு ரௌடிக் கும்பல் மிரட்டுகிறது. கருப்பு வெள்ளையில்
பிரபலமான விக்னேஷுக்கு ஒருவன் அடிக்கடி தொடர்புகொண்டு பணம் தருமாறு மிரட்டுகிறான்.
இப்படியாக அவனது நிஜவாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கனவில்
பிரதிபலிக்கின்றன.
இந்த கனவு-நிஜம் காட்சிகள் மட்டுமல்லாமல், படத்தின் ஆரம்பத்தில்
விக்னேஷ் தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கோமாவில் படுத்திருப்பதைக்
காட்டுகிறார்கள் அது கொலையா, தற்கொலையா, விபத்தா என போலிஸ் நடத்தும் புலனாய்வு
படத்தின் இடையிடையே காட்டப்பட்டு, முடிவில் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.
(விக்னேஷ் பிழைத்துவிடுகிறான். படம் சுபமாக முடிகிறது.)
இப்படியாக, மூன்று கதைகளையும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கொண்டுபோய்
கடைசிக் காட்சிகளில் அருமையாகக் கோர்த்து முடிக்கும்போது அதிர்கிறோம். படத்தை
மறுபடியும் பார்க்க எண்ணுகிறோம். இதுதான் இப்படத்தின் திரைக்கதையின் வெற்றி.
லூசியா (2013)

சித்தார்த்
இரு கதைகளிலும் இருவேறு உடல்மொழியுடன் நடிக்கும் சித்தார்த்தின்
நடிப்பும் படத்துக்கு ஒரு பெரிய பலம். சமீப காலமாக, அவர் காதலில் சொதப்புவது
எப்படி?, ஜிகிர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் என நல்ல, வித்தியாசமான
படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதும் பாராட்டத்தக்கது.
Verdict
மொத்தத்தில், பார்வையாளரைக் கண்டபடி குழப்பாமல், தேவையான திருப்பங்கள் மற்றும் அசரவைக்கும் முடிவுடன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Nolan படங்கள், புத்திசாலித்தனமான துப்பறியும் நாவல்களை ரசிப்பவர்கள் கண்டு களிக்கலாம். கடைசிக் காட்சி வரை பாருங்கள், ஒரு அருமையான அனுபவத்துக்கு நான் கியாரண்டி.. :-)
My Rating: 10/10
(படம் பார்த்துவிட்டீர்கள் என்றால், அப்படியே படத்தின் அலசல் (Analysis) ஐயும் இங்கே படித்துவிடுங்கள்.)
No comments:
Post a Comment